Tuesday, June 21, 2005

சிகரத்திற்கு ஒர் அஞ்சலி

பாரில் அதி சிறந்தவன்
என் தமிழ்த்தலைவன்
காலத்தை வென்றவன்
40 வருடம் முன்னோக்கி சிந்தித்தவன்
அச்சமில்லை என்று உச்சிக்
குரலில் முரசிட்டவன்
பெண் விடுதலைக்கு தன்னையே
உதாரணம் காட்டியவன்
கண்ணம்மா மீது தன்
காதலை கொட்டியவன்
அந்தம் இல்லா அருவி போல்
கவிப்பால் ஊற்றியவன்
சித்திரமான தமிழ் தாய்க்கு
சற்றே அழகு சேர்த்தவன்
தமிழ்த்தாய் வரமாய் பெற்ற பாரதி
தாள் வனங்குகிறான் - இவன்